Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

பாலபாரதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்!

மிக நீண்ட நாட்களாக  என்ன மொழி என்றே தெரியாமல் இரசித்து வந்த ஒரு வசீகரமான பாடல் எந்த மொழி என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்.அது ஒரு ஜப்பானிய நாட்டுப் பாடல். இந்தப் பாடலை பல பேர் பல விதமாக பாடியுள்ளனர். எனக்குப் மிகவும் பிடித்த அந்த பாடல் இதோ.


பி.கு : பாடல் எதைப் பற்றியது என்பது தெரியவில்லை.

இன்று மக்கள் தொலைக்காட்சியில் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தொடர் ஒன்றைப் பார்த்தேன். மக்கள் தொலைக்காட்சி சிறந்த கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறது. அதனால் சில நல்ல விசயங்களையும் தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பம் தொட்டே சுபாஷின் முகம் மிகப் பழகிப் பேசிச் சிரித்த முகம் போல இருந்தது. இதற்கு முன்பும் சுபாஷினுடைய புகைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நெருக்கமாக உணர்ந்தது கிடையாது.

சரி இது ஏதாவது பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே பாலபாரதியின் முகம் மனசுக்குள் கோடிட்டுச் சென்றது. ஆம் பாலபாரதியின் முகச் சாடையும் சுபாஷின் முகச் சாடையும் வியக்கத்தக்க விதமாக ஒத்துப்போகிறது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள.

பாலபாரதியும் நேதாஜி சுபாஷும்

பாலபாரதியும் நேதாஜி சுபாஷும்

குட்டி மகள்

குட்டி மகள்

நான்
தனியாக தேதி கிழிக்கையில்
தனியாக சவரம் செய்து கொள்கையில்
தனியாக உணவு அருந்துகையில்
தனியாக சாலையைக் கடக்கையில்
தனியாக உட்கார்ந்து இருக்கையில்
தனியாக புகைக்கையில்
தனியாக தேநீர் குடிக்கையில்
தனியாக நேரம் பார்க்கையில்
தனியாக மழையில் நனைகையில்
பூத்துக் கொண்டேயிருக்கிறது
குட்டி மகளின் ஞாபகம்.

வடபழனி பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் மாலை நின்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் எதையோ விநியோகித்துக் கொண்டே வந்தார். அவர் என்ன கொடுத்துக் கொண்டே வருகிறார் என்பதை அறிய பயங்கர ஆவலாக இருந்தது. சிலர் அவர் கொடுத்ததை அவர் நகர்ந்தவுடனேயே கீழே வீசி எரிந்தனர். சிலர் லேசான ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலேயே வைத்திருந்தனர். அவர் மெதுவாக நகர்ந்து என்னருகே வந்து என்னைப் பார்த்தார். சரி கொடுங்கள் என்பது போல நானும் பார்த்துவிட்டு கையை நீட்டினேன். அந்த மனிதர் என்னிடம் ஒரு சிறிய நோட்டீஸ் ஒன்றை கொடுத்தார். அந்த நோட்டீசில் இருந்த கடைசிப் பத்தியை இங்கே தருகிறேன்.

“கர்த்தராகிய இயேசுவே, நீரே சமாதனப் பிரபு. உம்முடைய சமாதனப் பிரபு. உம்முடைய் சமாதானம் எனக்குத் தேவையாயிருக்கிறது. என்னுடைய பாவமே உம்மைவிட்டு என்னைப் பிரிக்கிறது என்பதை நான் அறிவேன். தயவாய் என் பாவங்களை மன்னித்து, உம்முடைய இரத்தத்தினால் என் இருதயத்தை கழுவி சுத்திகரியும். இன்று நான் உம்மை என்னுடைய தேவனாகவும் என் இரட்சகராகவும் எற்றுக்கொள்கிறேன். நீர் என்ன செய்யச் சொன்னாலும் அதைச் செய்யும்படி நான் ஆயத்தமாய் இருக்கிறேன். தயவாய் எனக்கு உதவி செய்தருளும். என்னைக் குணமாக்கும் ஆண்டவரே, உம்முடைய சமாதானத்தை எனக்குத் தாரும். ஆமென்.”

என்ன உங்களுக்கு இதைப் படித்தவுடன் இந்தியா மற்றும் இன்ன பிற மூன்றாம் உலக நாடுகள் பற்றிய நினைப்புதான் வருகிறதா. ச்சே..ச்சே..இது அப்படியெல்லாம் இல்லை.

குறிப்பு : பழைய பதிவு புதுப்பிக்கப்பட்டது

கூட்டுக் கவிதை

பின் வருவது, தோழர் கேகே (கொண்டசாமி) அவர்களின் சமீபத்திய படைப்பான ‘பாரமாய் அழுத்தும் விக்கிரமாதித்யச் சுமை’ எனும் கவிதை தொகுப்பின் முகப்பு அட்டைக்கான கூட்டுக் கவிதை, எனது மற்றும் தோழர் பாரதி சே அவர்களின் வரிகள்…

அட்டைப்படம் – மு.க.பகலவன்

புரண்டு விழும் நிகழ்வுகள்
புறமுதுகின் விலா எலும்புகளை
விகாரமாய் அழுத்த
யுகம் யுகமாய்த் தொடர்கின்றன
படபடத்து உடையும் கனவுகள்.
கனவுகள் குழைத்த வெம்மையில்
தலை நனைத்த தூரிகை,
தீற்றல்களாய் உயிரெழும் நினைவுத்தீ.

சக்கரம்

 

மிதிபடுதலில்
வேகமெடுக்கும் பயணங்கள்.
பின்னோக்கிச்
சுழலத் தொடங்குகின்றன
சக்கரங்கள்.

 

Follow

Get every new post delivered to your Inbox.