
நேற்று சில நகர்கலைக் கலைஞர்களை வெகுநாட்களுக்கு பின்பு சந்தித்தேன். கே கே நகர் பொன்னம்பலம் சாலையில் உள்ள ஒரு சூப் கடையில் வழக்கம் போல அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அதே சாலையில் அமைந்துள்ள அவர்களது அறைக்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போது அந்த நண்பருக்கு பின்னால் இருந்த கணிதிரையில் ஒரு நகர்கலைப் படம் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது அந்த நண்பர் இந்த படத்தப் பாருங்களேன் என்று சொன்னார். அந்த படம் தந்தையும் மகளும் (Father and Daughter ). தனது தந்தையின் அரவனைப்பிற்காக ஏங்கும் ஒரு பெண்ணுடைய கதை.
ஒரு அப்பாவும் மகளும் சைக்கிளில் பயனம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த அப்பா ஒரு ஏரியில் அந்த குழந்தையை கரையில் விட்டு விட்டு படகில் சொல்கிறார். தனது அப்பாவை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த குழந்தை ,பிறகு சென்றுவிடுகிறது . பின்னர் அந்த குழந்தை ,தனது ஒவ்வொரு பருவத்திலும் தனது அப்பாவைத் தேடி அந்த ஏருக்கரைக்கு வருகிறது. கடைசியாக மூதாட்டியாக வரும்போது நீர் வற்றிப் போன ஏரிக்குள் இறங்கி தனது அப்பாவைப் பார்த்து மீண்டும் குழந்தைப்பருவத்திற்கே திரும்புகிறது .
இது பெண்கள் தனது தந்தையின் பாசத்திற்காக தங்களது வாழ்நாள் முழுக்க ஏங்கும் விசயம் நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நல்ல படைப்பிற்கு மொழி என்பது தடையாக இருக்காது என்பதை நிரீபித்திற்கும் ஒரு மொழியற்ற படைப்பு.
இந்த படைப்பு எனக்கு மனுஷ்யபுத்திரனின் வேறொரு மழை நாள் என்ற கவிதை நினைவிற்கு வந்தது.