பின் வருவது, தோழர் கேகே (கொண்டசாமி) அவர்களின் சமீபத்திய படைப்பான ‘பாரமாய் அழுத்தும் விக்கிரமாதித்யச் சுமை’ எனும் கவிதை தொகுப்பின் முகப்பு அட்டைக்கான கூட்டுக் கவிதை, எனது மற்றும் தோழர் பாரதி சே அவர்களின் வரிகள்…

அட்டைப்படம் – மு.க.பகலவன்
புரண்டு விழும் நிகழ்வுகள்
புறமுதுகின் விலா எலும்புகளை
விகாரமாய் அழுத்த
யுகம் யுகமாய்த் தொடர்கின்றன
படபடத்து உடையும் கனவுகள்.
கனவுகள் குழைத்த வெம்மையில்
தலை நனைத்த தூரிகை,
தீற்றல்களாய் உயிரெழும் நினைவுத்தீ.