இன்று மக்கள் தொலைக்காட்சியில் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தொடர் ஒன்றைப் பார்த்தேன். மக்கள் தொலைக்காட்சி சிறந்த கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறது. அதனால் சில நல்ல விசயங்களையும் தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது.
நிகழ்ச்சியின் ஆரம்பம் தொட்டே சுபாஷின் முகம் மிகப் பழகிப் பேசிச் சிரித்த முகம் போல இருந்தது. இதற்கு முன்பும் சுபாஷினுடைய புகைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நெருக்கமாக உணர்ந்தது கிடையாது.
சரி இது ஏதாவது பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே பாலபாரதியின் முகம் மனசுக்குள் கோடிட்டுச் சென்றது. ஆம் பாலபாரதியின் முகச் சாடையும் சுபாஷின் முகச் சாடையும் வியக்கத்தக்க விதமாக ஒத்துப்போகிறது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள.

பாலபாரதியும் நேதாஜி சுபாஷும்
உண்மை..